புகார் கொடுக்க வந்தவர்களை வேலை வாங்கிய போலீசார்


     தென்காசி அருகே போலி சாமியார் மீது புகார் கொடுக்க சென்றவர்களை காவல் நிலையத்தை சுத்தப்படுத்துமாறு கூறி மிரட்டியதாக போலீசார் மீது புகார் எழுந்துள்ளது.
      தென்காசியை அடுத்த அச்சங்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த கருமேனி ஆசாரி, குட்டி ஆகியோர், போலி சாமியார் ஒருவர் மீது மோசடி புகார் கொடுக்க சுரண்டை காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போது, சாமியாரை கைது செய்யும் வரை, காவல் நிலையத்தை சுத்தப்படுத்துமாறும், வளாகத்தில் உள்ள புற்களை அகற்றுமாறும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
   இதனையடுத்து, புகார் கொடுக்க சென்றவர்கள் காவல்நிலைய வளாகத்தை சுத்தம் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுபோன்ற வேலகளை செய்யுமாறு காவல்துறையினர் தங்களை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறினர்.